கிழக்கு கடற்கரை சாலையிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஆலம்பாறை கோட்டை குறித்தப வெகு சிலரே அறிந்திருக்கிறாரகள். மிக அருமையான இந்த இடம் மரக்காணத்திற்க மிக அருகில் அமைந்துள்ளது.
ஓருமுறை புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் பொழுது நேரம் இருந்ததால் ஆலம்பாறை கோட்டைக்கு சென்றோம். சிதிலமடைந்த கோட்டையும் , அருகில் நீர் நிலையும் என சூழல் மிக அருமை .
நீர் நிலையின் அப்பால் மணல் திட்டு அதற்கு பின் பரந்த கடல்வெளி.
நீர் நிலையில் மீனவர் ஓருவர் படகில் அழைத்து சென்றார். படகு பயணம் மிக சிறப்பானதாயிருந்தது. படகிலிருந்து பார்க்கும் போது கோட்டை மிகவும் அழகு.
இங்கே சின்னத்திரை , வெள்ளித்திரை என பல படப்பிடிப்புகள் அடிக்கடி நடைபெறுகின்றது.
சென்னையிலிருப்போர் வார இறுதியில் சில மணித்துளிகளில் செல்ல நல்ல இடம்.
வாய்ப்பிருந்தால் செல்ல தவறாதீர்கள்.